குணப்படுத்த முடியாத.. இந்தியாவில் தீவிரமடையும் வௌவால்களால் பரவும் கொடிய வைரஸ்

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றில், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர்களை அடையாளம் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்திய சுகாதார அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தும் நடவடிக்கை

வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ், மேற்கு வங்காளத்தில், மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் என்பதால், அவசரத் தொடர்புகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்த வாரம் மூன்று பேர்களுக்கு புதிதாக நிபா வைரஸ் அறிகுறிகள் உறுதி செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு சுகாதாரப் பணியாளர் ஆகியோர் அடங்குவர்.

இரண்டு செவிலியர்கள் – ஒருவர் ஆணும், ஒருவர் பெண்ணும் – ஏற்கனவே முன்னதாகவே நிபா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அவர்கள் இருவரும் கொல்கத்தாவிற்கு வடக்கே சுமார் 15 மைல் தொலைவில் உள்ள பராசத் நகரில் உள்ள நாராயணா மல்டிஸ்பெஷாலிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர்.

புத்தாண்டு இரவிற்கும் ஜனவரி 2-க்கும் இடையில் இரு செவிலியர்களுக்கும் கடுமையான காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகம் தெரிவித்துள்ளார்.

தற்போது கோமா நிலையில் உள்ள அந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் செவிலியர், கடுமையான சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சையளித்தபோது இந்தத் தொற்றுக்கு ஆளானதாக நம்பப்படுகிறது.

பரிசோதனைகள் முழுமையடைவதற்கு முன்பே அந்த நோயாளி இறந்துவிட்டார். இதனையடுத்து, வைரஸ் பரவும் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் 180 பேருக்குப் பரிசோதனை செய்துள்ளனர் மற்றும் அதிக ஆபத்துள்ள தொடர்பில் இருந்த 20 பேரைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இறப்பு விகிதம் 75 சதவீதம்

நிபா வைரஸ் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பரவுகிறது; இது பொதுவாக பாதிக்கப்பட்ட வௌவால்கள் அல்லது பன்றிகளிடமிருந்து பரவுகிறது, மேலும் இது மனிதர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவக்கூடும்.

இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் முழுவதும் பரவலாகக் காணப்படும் பழங்கள் உண்ணும் வௌவால்கள், இந்த வைரஸின் இயற்கையான பரவலுக்கு முதன்மை காரணமாகும்.

மனிதர்களில், இந்தத் தொற்று ஆரம்பத்தில் அறிகுறியற்றதாக இருக்கலாம், ஆனால் அது விரைவாக கடுமையான சுவாச நோயாக மாறக்கூடும். இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி ஆகியவை அடங்கும்.

கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில், இது மூளை அழற்சியை ஏற்படுத்தி, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்கு வழிவகுக்கும். இந்த வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை உள்ளது, மேலும் இதற்கு எந்த சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை.

2018-ல் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, இந்த வைரஸ் தெற்கு மாநிலமான கேரளாவில் டசின் கணக்கான இறப்புகளுக்கு காரணமானது.

நிபா வைரஸ் முதன்முதலில் 1999-ல் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கண்டறியப்பட்டது, அங்கு அது பன்றி வளர்க்கும் விவசாயிகளைத் தாக்கியது. அதன் பின்னர், இது இந்தியா மற்றும் வங்கதேசத்தின் சில பகுதிகளில் நோய்ப் பரவல்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *