அப்பாவுக்கு சிகிச்சை அவசரம் திரிஷா செய்தது இதுதான் அவசரமாய் எடுத்த அந்த முடிவு!!!

காய்ச்சலுக்கு இளநீர்: பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?

காய்ச்சல் இருக்கும்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் பொதுவான பரிந்துரை. ஏனெனில், காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பையும் தாது உப்புகளின் சமநிலையின்மையையும் சரிசெய்ய இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் குளிர்ச்சியை உண்டாக்கி, வெப்பநிலையை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. இதன்மூலம், காய்ச்சலின்போது ஏற்படும் அசௌகரியம் குறைந்து, உடல்நலம் மேம்படும்.

ஆனால் அதே நேரத்தில் காய்ச்சல் கடுமையாகவோ அல்லது டர்ச்சியாக நீடித்தாலோ, மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகே இளநீர் அருந்த வேண்டும். மேலும், இளநீரை அளவுக்கு அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் சோடியம் சத்து அதிகமாக இருப்பதால், அதிக அளவில் உட்கொள்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மிதமான அளவில் எடுத்துக்கொண்டால், இளநீர் காய்ச்சல் நேரத்தில் சிறந்த புத்துணர்ச்சி பானமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *