திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக கொண்ட அமைச்சரவை மீது இப்பேரவை தனது நம்பிக்கையை தெரிவிக்கிறது என நான் முழிந்துள்ள அரசினர் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளை சார்ந்த மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் உரையாற்றியுள்ளனர். உரையாற்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக உரையாற்றிய மான்புமிகு திரு சே ராஜேஷ் குமார் அவர்கள் தீர்மானத்தை வரவேற்றதோடு மட்டுமல்லாமல் மதசார்பற்ற அரசுக்கான ஆதரவு

என கூறினார்கள் நிச்சயமாக இந்த அரசு மதசார்பற்ற அரசாகத்தான் செயல்படும் என்கிற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக உரையாற்றிய திரு ஆர் செல்லசுவாமி அவர்கள் இந்த தீர்மானத்தை வரவேற்று முழுமையான ஆதரவு தெரித்துள்ளார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உரையாற்றிய மான்பமிகு உறுப்பினர் திரு பன்னி அரசு அவர்கள் உரையாற்றுகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இந்த அரசு ஐந்து ஆண்டுகள் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தமைக்கு என்னுடைய நன்றியை

தெரிவித்துக் கொள்கிறேன் ஆதரிப்பவர்களுக்கு மட்டுமான அரசல்ல எதிர்ப்பவர்களுக்கான அரசும் இது என சுட்டிக்காட்டியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்ததிட்டங்கள் தொடரும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக உரையாற்றிய மாண்புமிகு திரு ஆமு ஷாஜகான் அவர்கள் தீர்மானத்தை வரவேற்று வரலாற்று சாதனை இந்த அரசு படைக்கும் என வாழ்த்தியுள்ளார்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு எஸ். காமராஜ் அவர்கள் தீர்மானத்தை வரவேற்று உரையாற்றி
உள்ளார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உரையாற்றிய மாண்புமிகு திரு ராமச்சந்திரன் அவர்கள் தீர்மானத்தை வரவேற்று பேசியுள்ளார்கள். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக உரையாற்றிய மாண்புமிகு உறுப்பினர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உரையாற்றுகையில் எதிர்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் எங்கள் அரசு செயல்படுவது குறித்து குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு என்னுடைய நன்றி மேலும் ஓரிரண்டு கருத்துக்களை தெரிவித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் ஐ வில் ரீதிங்கஅபட் இட் தமிழ்நாட்டை ஆண்ட
பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசுகள் இந்த நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி தீட்டிய திட்டங்கள் சமூக நீதிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களின் எண்ணங்கள் என இவற்றை மனதிலே கொண்டு எங்களுடைய ஆட்சி நடைபெறும் என்கிற உறுதியை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சி சார்பாக பேசிய திரு எம். போஜராஜன் அவர்கள் நடுநிலை வகிப்பதாக தெரிவித்து உரையாற்றியுள்ளார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அடுத்து உரையாற்றிய மான்புமிகு முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள்
உரையாற்றுகையில் விவசாயிகள் இளைஞர்கள் மகளிர் நலன் மது ஒழிப்பு குறித்து செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட தீர்மானத்தில்ிருந்து விலகி நிற்பதாக தெரிவித்துள்ளார்கள். மகளிர் பாதுகாப்பிலிருந்து தவறு தவற எந்த அரசு இம்மிய அளவும் இடம் தராது. அடுத்து உரையாற்றிய மாண்புமிகு திரு மு. தமிழன் அன்சாரி மாண்புமிகு திரு கே. நித்தியானந்தன் மாண்புமிகு முனைவர் எம்.எச் ஜுவாஹிருல்லா மாண்புமிகு திரு எடப்பாடி கே. பழணசாமி அவர்கள் மற்றும் ஆகியோர் உரையாற்றுகையில் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றியுள்ளார்கள்.
எதிர்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். மான்புமிகு திரு எஸ்பி வேலுமணி அவர்கள் தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றி உள்ளார்கள். குதிரை வேரத்தில் எமது அரசு ஈடுபடுகிறது என்று கருத்தை தெரிவித்த மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுகிற அரசே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடுகிற அரசு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில்ிருந்து இம்மி அளவு விலகாமல் நிச்சயமாக இந்த ஆட்சி நடைபெறும்
எனவே நான் மொழிந்துள்ள இதீர்மானத்தை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன்
