ஏர் இந்தியா விமான விபத்தில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு

இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட லண்டனுக்கு ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அடங்குவர் என தகவல் வெளியாகி உள்ளது.

29 வயதான வைபவ் படேலும் அவரது 27 வயது மனைவி ஜினல் கோஸ்வாமியும் தங்கள் வளைகாப்பு விழாவிற்காக அகமதாபாத்திற்குச் சென்றிருந்தனர்.

இந்தத் தம்பதியினர் லண்டனின் குராய்டனில் வசித்து வந்தனர், ஆனால் சமீபத்தில் படேல் பணிபுரிந்த ஹாம்ப்ஷயரில் உள்ள சவுத்தாம்ப்டனில் இருந்து குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையின் பிறப்புக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்களின் நெருங்கிய நண்பர் நீரவ் படேல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *